
#Thiruvallur #CaptainNews | #TamilNews
திருவள்ளூர் அருகே கண் பார்வையற்றவர்களுக்காக கட்டுப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவதியடைந்து வரும் அவர்கள், வீடுகளை கட்டி முடிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே போரூர் புதுநகர் பகுதியில் கடந்த 2015 - 2016-ம் ஆண்டு கண் பார்வையற்ற குடும்பங்களுக்கு இரண்டரை சென்ட் நிலத்தில் வீடுகட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக இந்திரா குடியிருப்பு திட்டத்தில் 65 வீடுகளுக்கு தலா ஒருலட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.. அதில் 15 வீடுகள் மட்டுமே முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு, கண் பார்வையற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 45 வீடுகளுக்கான பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக வீடுகள் கட்டுவதற்கான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த 45 வீடுகளும் பாழடைந்து காணப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் விரைவில் குடியேறி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த கண் பார்வையற்ற குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் தொகுப்பு வீடுகளுக்கான பணிகளை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வீடுகள் இன்றி அவதியடைந்து வரும் தங்களின் நிலையை அறிந்து
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
தொகுப்பு வீடுகளின் பணிகள் பாதியிலேயே நிறுத்தம் -கண் பார்வையற்றோர் கோரிக்கை video phone beyonce mp3 | |
2 Likes | 2 Dislikes |
38 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 10 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét